அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முடிவாகி ஒப்பந்தத்தில் அமித்ஷா கையெழுத்திடும் நிலை ஏன் வரவில்லை தெரியுமா?‘"சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகி, அ.தி.மு.க. ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், 16-ஆம் தேதி சசிகலா பொதுச் செயலாளர் ஆகக்கூடிய நிலை உருவாகும். இல்லையென்றால் இரட்டை இலை முடக்கப்படும்'’என்று அதிரடியாகப் பேசிவிட்டுக் கிளம்பினார் அமித்ஷா.
அதன்பிறகு, சீனியர் அமைச்சர்களைச் சந்தித்த எடப்பாடி, ""தென்மாவட்டம் எப்படி இருக்கிறது?''’என்று கேட்டிருக்கிறார். அப்போது, ‘""சின்னம்மாவ சேர்த்தா ஃபுல்லா வந்திடலாம். சேர்க்க லைன்னா தென்மாவட்டத்துல ஒரு சீட்கூட வராது...''’என்று தங்களிடம் ராஜேந்திரபாலாஜி சொன்னதை அப்படியே ஒப்பித்திருக்கிறார்கள், இரண்டு அமைச்சர்கள். அதற்கு இ.பி.எஸ்., ‘""நாலரை வருஷம் அவரை காப்பாத்தி மந்திரியா வச்சிருக்கோம்... இப்படியா சொல்லிட்டிருக்காரு?''’ என்று டென்ஷனாக, அதற்கும் ராஜேந்திரபாலாஜி வாய்ஸையே ரிபீட் செய்திருக்கின்றனர்.
""என்னை அமைச்சராக்கியது அம்மா. அவங்க பொதுச்செயலாளரா இருந்தப்ப... முதலமைச்சரா இருந்தப்ப... எனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு தந்து மந்திரியாவும் ஆக்கினாங்க. இ.பி. எஸ். என்ன பண்ணுனாரு? மாவட்டச் செயலாளர் பொறுப்புல இருந்து என்னை நீக்கினாரு. அப்புறம் மாவட்ட பொறுப்பாளர் ஆக்கினாரு. இப்ப என்னோட விருதுநகர் மாவட்டத்த ரெண்டாக்கிட்டாரு. சின்னம்மாவ கட்சியில சேர்த்தால்தான் முக்குலத்தோர் ஓட்டு, இல்லைன்னா அந்த சமுதாய ஓட்டு அ.தி.மு.க.வுக்கு விழாது''’ என்று கூற... "இந்த மாதிரி பேசிக்கிட்டிருந்தா அவரை தொலைச்சிருவேன்'னு இ.பி.எஸ். கூடுதலாகக் கொதித்திருக்கிறார். கட்சியில் சேர்த்து மீண்டும் சசிகலாவுக்கு எடுபிடிகள்’ஆவதை விரும்பாத தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் போன்றவர்கள், எடப்பாடி பக்கம் உள்ளனர். ‘"சின்னம்மாவை சேர்த்தால் நல்லது'’ என்ற ராஜேந்திர பாலாஜியின் கருத்து, ஓ.பி.எஸ்.ஸுக்கு உள்ளுக்குள் ‘ஓ.கே.’ என்றாலும், வெளிப் படையாக ‘ரியாக்ட்’ பண்ணவில்லை.
"சசிகலாவை சேர்த்தால் முக்குலத்தோருக்கு எதிரான மனநிலையில் உள்ள பிற சமுதாய வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு விழாது. குறிப்பாக பட்டியலின மக்களின் வாக்குகள் மொத்தமாக எதிரணிக்குப் போய்விடும்'’’என்ற கோணத்தில் நிர்வாகி ஒருவர் பேச, ‘""ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி. இவரை எந்த சமுதாய மக்களும் நம்பமாட்டார்கள்'' என்று ‘கமெண்ட்’ அடித்திருக் கிறார் இன்னொரு நிர்வாகி.
சசிகலா நிலைப்பாடு என்னவாம்? இரட்டை இலைக்கு எதிராக வாக்கு கேட்பதை ஒருநாளும் செய்ய மாட்டார். அதேநேரத்தில், பொதுச்செயலாளர் பொறுப்பு இல்லையென்றால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வும் தயங்கமாட்டார்.
"சசிகலாவுக்கு எதிரான போக்கினை எடப்பாடி தொடர்ந்தால் ‘மீண்டும் 1989’ என்ற நிலை ஏற்பட்டு அ.தி.மு.க. பாதிப்படையும்' என புலம்புகிறார்கள் அ.தி.மு.க.வினர்.